நாளிதழ் வாசிப்பதன் நன்மைகள். (Nalithal vaasippathan nanmaigal)

 






    நாளிதழ்  வாசிப்பதால் நாம் பல நன்மைகள் அடைகின்றோம். நாளிதழின் மூலம் நாம் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம். நாளிதழ் தமிழ்மொழி, தேசிய மொழி, ஆங்கில மொழி என பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மொழியில் ஏறக்குறைய ஐந்து பெயர்களில் நாளிதழ் அச்சிடப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழ் மொழியை எடுத்திக் கொண்டால் நண்பன், தமிழ் நேசன், வானம்பாடி, மக்கள் ஓசை, காலை மலர் என பல வகையான பெயரிகளில் உள்ளது.

     நாளிதழில் நாம் செய்திகளை வாசிப்பதன் மூலம் உச்சரிப்பைச் சரி செய்து கொள்ளலாம். சிலர் நாளிதழ் வாசிக்க சோம்பல் பட்டு தொலைகாட்சியில் போடும் செய்திகளைப் பார்க்கின்றனர்; கேட்கின்றனர். அதிலும் வாசிக்கத் தெரியாதவர்களும் உள்ளனர்.

     அது மட்டுமல்லாமல், படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடி தருகின்றது நாளிதழில் வரும் விளம்பரங்கள். அது மட்டுமா? விளம்பரங்கள் கொடுப்பவர்களின் தொழில்துறையும் உயர்கின்றது. அரசாங்கத்தினரும் அளவுக்கு அதிகமாக வசூலித்து மக்களுக்கு லாபகரமான செயல்களைச் செய்கின்றனர். இதனால் மக்களும் நன்மை அடைந்து மகிழ்கின்றனர்.

     எனக்கு வானம்பாடி நாளிதழைப் படிக்க மிகவும் பிடிக்கும். காரணம் அந்த நாளிதழில் காமெடிகள், சமையல் குறிப்புகள், கவிதைகள், அழகு குறிப்புகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு தலைப்பும் எனக்கு பல நன்மைகளை வகிக்கின்றன. உதாரணத்திற்குச் சமையல் குறிப்புகளை எடுத்துக் கொண்டால் நான் எனது வீட்டில் நண்டு வருவல், தக்காளி தோசை, கோழி பிரட்டல் என பல வகையான சமையல்களை அசத்துவேன். அதோடு, நான் எனது உறவினர்களுக்கும் என் தந்தையின் நண்பர்களுக்கும் சமைத்திக் கொடுத்துள்ளேன். வானம்பாடி நாளிதழின் மூலம் பல நன்மைகள் அடைந்துள்ளேன்.

     நாம் நாளிதழ் வாசிப்பதன் மூலம் கொலை, கொள்ளை, மரணம், வாகனம் மற்றும் சாலை விபத்து, பெண் கற்பழிப்பு, கருமக்கிரியை, பிறந்தனாள் குழந்தைகளுக்கு வாழ்த்து என இன்னும் பல முக்கியச் செய்திகளைத் தெரிந்துக்  கொள்ள இயல்கிறது. இதன் மூலம் நாம் கிணற்றுத் தவளைப் போல இல்லாமல் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இச்செய்திகளைப் படிப்பவர் சிலர், தவரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், தவரான செயல்களில் ஈடுபடுபர்களைத் தடுத்து நிருத்துவர். இதன் மீலம் அவர்களுக்கு நற்பெயரும் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

     நாளிதழ்களில் விளையாட்டுச் செய்திகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. சில முதியவர்களுக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். விளையாட்டைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் விளையாட்டுச் செய்தியைப் படிப்பார்கள். சிலர் விளையாட்டுச் செய்திகளைக் கத்தரித்து தனது புத்தகங்களில் சேகரித்துக் கொள்வார்கள். சிலர் விளையாட்டுச் செய்திகளை வாசிப்பதற்காகவே தினமும் நாளிதழ் வாங்குவார்கள். இதன் மூலம் நமது நாட்டு பொருளாதாரம் மேன்மை அடைகிறது.

     அதோடு, நாளிதழ், சிறுவர்களுக்கும் நல்ல பலன் தருகிறது. நாளிதழில் சிறுவர்களுக்காக சிறுவர் பூங்கா என்று பெயர் கொண்டுள்ளது. இது இரண்டு முதல் மூன்று பக்கங்கள் வரை நீடிக்கும். இதில் கதை, கவிதை, கட்டுரை, சொல் களஞ்சியம், விடுகதை என பல வகையாக உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காகச் சிறுவர் பூங்காவில் உள்ள கதைகளைப் படித்து காட்டுவார்கள். இந்த கதைகள், இரவில் சீக்கிரமாக உறங்குவதற்குச் சுலபமாக உள்ளது. சில மாணவர்கள் அந்த கதைகளை சபைக்கூடலிலோ அல்லது கதைப் போட்டிகளிலோ சொல்லும் போது மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றனர். அது மட்டும் இல்லாமல், பாராட்டு பெற்று முதல் பரிசை அடைகின்றனர். இதனால், பள்ளிக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நற்பெயரை ஈட்டித் தருகின்றனர்.

     சில இளைஞர்கள் எங்கு எப்பொழுது எந்தத் திரையரங்கங்களில் என்ன திரைப்படம் வெளியாகிறது என்பதை அறிந்துக் கொள்வதற்காகவும் நாளிதழ்கள் துணைப்புரிகின்றன. வாரத்திற்குக் குறைந்தது இரண்டு திரைப்படம் நாளிதழில் அறிவிக்கப்படுகிறது. இது இன்றைய இளைஞர்களுக்கு உதவியாக இருக்கிறது.

     ஆகவே, நண்பர்களே நாம் நாளிதழ் வாசிப்பதால் பல நன்மைகளை அடைகின்றோம். அனைவரும் நாளிதழ் வாசித்து நன்மை பெருவீர்கள் என நான் நம்புகிறேன். நாளிதழுக்கு என்றும் அழிவே இல்லை எனவும் நம்புகிறேன்.



Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.