சொந்தத் தொழில் செய்வதனால் ஏற்படும் விளைவுகள்


    தற்பொழுது நம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லாமல் பலர் சொந்தத் தொழில் செய்வதில் நாட்டம் கொண்டுள்ளனர்.  சொந்தத் தொழில் என்பது தனிச்சயாகச் செய்யக் கூடிய பணியாகும். வியாபாரம், விவசாயம் போன்றவற்றைச் சொந்தத் தொழில் அடங்கும். சொந்தத் தொழில் செய்வதால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன.

    சொந்தத் தொழில் செய்வதற்குப் பணி நேரம் என்று எதுவும் கிடையாது. ஆகையால், நாம் ஓய்வு நேரதிக்கேற்ப வேலையாச் செய்யலாம். சில நேரங்களில் அதிக நேரம் தொடர்ந்து உழைக்க வேண்டும். கடின உழைப்பும் விடா முயற்சியும் மிகவும் முக்கியம். இவை இருந்தால் சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம். 

    அடுத்து, சொந்தத் தொழில் செய்வதால் நாமே சுய முடிவுகளையும் எடுக்க முடியும். நாம் எடுக்கும் முடிவுகள் சில வேளைகளில் நம்மை உயர்திக் கொண்டே போகும் என்பது திண்ணம். எனவே, சொந்தத் தொழிலில் பல அனுபவங்களும் அதிக வருமானமும் கிடைக்கும். அதோடுமட்டுமல்லாமல், சொந்தத் தொழிலில் ஈடுபடுவதால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நமக்குத் பல தொழிலதிபர்களுடன் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும். குன்றின் மேலிட்ட விளக்கு போல திறமைகள் உலகமெங்கும் பரவ செய்யலாம்.

    இருப்பினும், சொந்தத் தொழில் செய்வதால் சில தீமைகளும் உள்ளன. சொந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு முதலில் நிறைய முன்னனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் இல்லையென்றால் பல சிக்கல்களையும் தோல்விகளையும் எதிர்நோக்க நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தற்போது நாட்டின் பொருளாதார நிலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆழம் அறியாமல் காலை விடாதே என்பதற்கேற்ப அத்துறையில் உள்ள நுணுக்கங்களை அறியாமல் வேலை செய்தால் நிறைய பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

    அதுமட்டுமல்லாது, சொந்தத் தொழில் செய்வதற்கு அதிக முன்பணம் தேவைப்படும். சேமிப்பு இல்லாதவர்கள் சொந்தத் தொழில் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்க நேரிடும். மேலும், தம் தொழிலை முன்னேற்றிக் கொள்ள நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்தத் தொழிலில் ஈடுபடுவோர் முட்டுக்கட்டையாக இருக்கும் பல தடைகளைக் கடந்து முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். தொழிலை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருப்பதால்  அழுத்தம் ஏற்படும்.

     இறுதியாக,சொந்தத் தொழிலில் கிடைக்கும் சுதந்திரமும் சந்தோஷமும் மாத வருமானத்தில் பெற்றுவிடமுடியாது. இருப்பினும், முன் அனுபவமும் தேவையான பணமும் இல்லாமல் சொந்தத் தொழிலில் ஈடுபட முடியாது. எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொண்டு சொந்தத் தொழிலில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

Comments

Popular posts from this blog

கடல் - கட்டுரை (Kadal - katturai)

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.