Posts

Showing posts from April, 2021

நேர்காணல் என்றால் என்ன?

Image
>> நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெரும் ஓர் உரையாடல்   ஆகும். >> நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும், பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும். >> நேர்காணல் பல்வேறு துறையில் பல்வேறு வகையில் காணப்படுகின்றன. செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். அதுமட்டுமின்றி செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும்.  >> நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. >> நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ, தொலைப்பேசி வழியாகவோ, கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். >> நேர்காணலின் நன்மைகள்: # புதிய கட்டுரைக் கருத்துகளைப் பெறலாம். # அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணைப் புரியும். # செய்திகளை உருவாக்கலாம்  # பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாயிர...

உடல்நலம்

Image
    ' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதனை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மனிதர்களாகிய நமக்கு உடல்நலம் மிகவும் முக்கியம். உடல்நலம் நம் உயிரினும் மேலானது. உடல்நலம் குன்றி உடல் மோசமாக ஆகிவிட்டால் உயிருக்கே ஆபத்து. நோயற்ற வாழ்வும், சுகாதாரமும், நலமும் உடல்நலனுக்கு அர்த்தமாகும். நாம் உடல்நலனுடன் இருப்பதே இறைவன் நமக்களித்த சந்தோசம் மற்றும் வரமாகும். 'எனக்கு இந்த வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை' எனும் வசன வரியைத் தவிர்த்துவிட்டு இறைவன் நம்மை உடல்நலத்துடன் வைத்துக் கொள்வதை எண்ணி சந்தோசம் அடைய வேண்டும். உடல்நலத்தைப் பாதுகாப்பதற்காகப் பல வழிமுறைகள்  விரல் நுனியில் உள்ளன.     முதலாவதாக, நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றான உணவுப் பழக்கத்தைக் கவனிக்க வேண்டும். நம் உணவில் நன்மை மற்றும் தீமை என அனைத்தும் உள்ளன. நாம் உணவு உண்ணும் போது சமசீர் உணவானது, உணவு கூம்பகத்தைப் பின்பற்ற வேண்டும். உணவு கூம்பகத்தில் நமது உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முதல் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வரை அனைத்தும் வரிசையாக  இருக்கும். உதாரணத்திற்கு, எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவு...

திரைப்படங்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி அல்ல - வாதித்து எழுதுக.

Image
    இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்கள் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டன. திரைப்படங்களை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டியாக நினைக்கிறார்கள்.  ஆனால்,திரைப்படங்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி அல்ல என்பதே தலையாய உண்மையாகும்.     இன்றைய திரைப்படங்கள்  வன்முறை காட்சிகளை அதிகம் கொண்டிருப்பதால் அதனை வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாகக் கொள்ள முடியாது. சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் பார்ப்பவர்களின் மனதில் வன்முறையை விதைக்கின்றன. எடுத்துக்காட்டாக  வேதாளம்,  புலி, பாகுபலி போன்ற படங்கள் மனித கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திப் பேசுகின்றன.     திரைப்படங்களில் வாழ்க்கைக்குத் தேவையான சமயக்கல்வி இருப்பதில்லை. தற்சமயம் கடவுள் இல்லை என  சொல்வதும் போன்ற திரைப்படங்களில் கடவுள் நம்பிக்கையைப்  பற்றி தவறாகப்  போதித்து வருகின்றனர்.  மேலும்,  சாமி வந்து ஆடும் பெண்கள் சினிமா பாடல்களுக்கு ஆடுவதைப் போன்று மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.     திரைப்படங்கள்  குற்றவாளிகளையும் குண...

மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் நன்மையே - ஆதரித்து எழுதுக

Image
    "ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்பதற்கேற்ப மாணவர்கள் அவசியம் விளையாட்டில் ஈடுபட வேண்டும். இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது குறைந்து கொண்டே வருகின்றது. மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் நிறைய நன்மையே விளைகின்றன.     மாணவர்கள் விளையாடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் விளையாட்டில் ஈடுபடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்கும். 'உடலினை உறுதி செய்' என்பதற்கேற்ப னாய் நொடியின்றி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ முடியும். விளையாடுவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறப்பாகச் செயல்பட துணைப்புரியும்.     விளையாடடில் ஈடுபடுவதால் மாணவர்களிடையே 'இலைமறை காய் போல' மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். மாணவர்கள் பூப்பந்து, காற்பந்து, ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை  வெளிக்கொணர முடியும். இதனால், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும்.     அடுத்து, விளையாட்டுகளில் ஈடுபடுவதால் மாணவர்களிடையே நற்பண்புகளை...

காடுகளை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை விவாதித்து எழுதுக.

Image
' காடுகள் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்' 'குடியிருக்க வீடுகள் கட்ட காடுகளை அழிக்காவிடில் வேறு என்ன செய்வீர்?'     மேற்கண்ட இரு வரிகளும் இத்தலைப்பையொட்டி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. நம் வீட்டைச் சுற்றி முன்பிருந்த காடுகள் இப்பொழுது இல்லாமல் போனதைப் பற்றி சமூகம் அக்கறை கொள்வதே இல்லை. நம் முன்னேற்றத்திற்காகக் காடுகளை அழிப்பதில் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன.     காடுகளை அதிகம் அழிப்பதால் மனிதர்கள் சுவாசிக்கப் பிராணவாயு இல்லாமல் போகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றான பிராணவாயுவைத் தாவரங்களிடமிருந்துதான் பெற முடியும். காடுகளை அழிப்பதால் நமக்கு வேண்டிய தூய்மையான காற்று கிடைக்காமல் போகின்றது. இதனால், தூய்மையான காற்று கிடைக்காமல் மனிதர்களின் சுகாதாரம் பாதிக்கப்படும்.      மேலும், காடுகளை அழிப்பதால் மிருகங்களுக்கு வசிப்பிடங்கள் இல்லாமல் போகின்றன. காட்டில் வாழும் குரங்குகளும் பாம்புகளும் என இன்னும் பல விலங்குகளும் நம் வீட்டை நோக்கி வருவதுண்டு. பள்ளிக்கூடங்களில் பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, காடுகளை ...