திரைப்படங்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி அல்ல - வாதித்து எழுதுக.
இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்கள் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டன. திரைப்படங்களை வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டியாக நினைக்கிறார்கள். ஆனால்,திரைப்படங்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டி அல்ல என்பதே தலையாய உண்மையாகும்.
இன்றைய திரைப்படங்கள் வன்முறை காட்சிகளை அதிகம் கொண்டிருப்பதால் அதனை வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாகக் கொள்ள முடியாது. சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் பார்ப்பவர்களின் மனதில் வன்முறையை விதைக்கின்றன. எடுத்துக்காட்டாக வேதாளம், புலி, பாகுபலி போன்ற படங்கள் மனித கொலைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்திப் பேசுகின்றன.
திரைப்படங்களில் வாழ்க்கைக்குத் தேவையான சமயக்கல்வி இருப்பதில்லை. தற்சமயம் கடவுள் இல்லை என சொல்வதும் போன்ற திரைப்படங்களில் கடவுள் நம்பிக்கையைப் பற்றி தவறாகப் போதித்து வருகின்றனர். மேலும், சாமி வந்து ஆடும் பெண்கள் சினிமா பாடல்களுக்கு ஆடுவதைப் போன்று மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
திரைப்படங்கள் குற்றவாளிகளையும் குண்டர் கும்பல் தலைவர்களையும் கதாநாயகர்களாகக் காட்டுகின்றன. அவர்கள் வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியாது. எதிர்கால சந்ததியினர் குண்டர் கும்பல் தலைவனாக மாறினால் பலருக்கு உதவலாம் என்கிற தவறான கொள்கைக்கு ஆளாகிவிடுகிறார்கள். பின்னர், தாம் குற்றவாளிகளாக இருந்தாலும் சமூகத்தின் நன்மதிப்பு கிடைக்கும் என திரைப்படங்களைப் பார்த்து நம்பிவிடுகிறார்கள்.
திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் கடுஞ்சொற்கள் இரு வெவ்வேறான அர்த்தங்கள் நிரம்பிய மனதைப் பாதிக்கும் வசனங்கள் சமூகத்தில் எல்லோரினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. முகத்தைச் சுழிக்க வைக்கின்ற அருவறுப்புமிக்க வசனங்கள் இன்றைய திரைப்படங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தன் அன்றாட வாழ்க்கையில் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களின் வாழ்க்கை தரம் மோசமடையும்.
ஆகவே, இத்தனை தீமைகள் அடங்கிய திரைப்படங்கள் எவ்வழியிலும் இச்சமூகத்தின் நல்வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ முடியாது என்பது திண்ணம். மனிதர்கள் தம் பகுத்தறிவைக் கொண்டு திரைப்படங்களை ஆராய்ந்து அதன் விளைவுகளை உணர வேண்டும்.
Comments