மின்னியல் வணிகத்தால் விளைவுகள்
மின்னியல் வணிகம் என்பது நாம் இணையத்தில் செய்யும் வணிகம் எனப்படும். இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் நம் நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் பல நாடுகளில் மின்னியல் வணிகம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.எண்ணிலடங்கா மக்கள் மின்னியல் வணிகத்தைப் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிறுதொழில் செய்பவர்கள் முதல் பெருந்தொழில் செய்பவர்கள் வரை பலரும் மின்னியல் வணிகத்தை விரும்பி மேற்கொள்கின்றனர். ஆகையால், இணையம் வழியாக மேற்கொள்ளப்படும் மின்னியல் வணிகத்தால் பல உள்ளன.
மின்னியல் வணிகம் மேற்கொள்வதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறுதொழில் மற்றும் பெருந்தொழில் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை அல்லது பொருட்களை அதிகளவில் விற்பனை செய்யலாம். இதனால், வியாபாரிகள் அதிகமான அளவில் தங்களது வருமானத்தை ஈட்டலாம். மின்னியல் வணிகத்தால் வியாபாரம் செய்வதற்கு முன்பு சிறுதொழில் வியாபாரிகள் உள்நாட்டில் மட்டுமே வியாபாரம் செய்தனர். இதனால், குறைந்த வருமானமே பெற்று வைத்தனர். அதோடு மட்டும் இல்லாமல், மின்னியல் வணிகத்தால் குறைந்த செலவில் பல நாடுகளுக்குப் பொருளை விற்க முடிகின்றது. இதனால், பல மடங்கு வருமானத்தை ஈட்டலாம்.
அடுத்ததாக, பயனீட்டாளர்கள் வீட்டில் இருந்தவாரே மின்னியல் வணிகத்தில் பொருட்களை வாங்கலாம். இதனால், எளிமையாகவும் மற்றும் அலைச்சலின்றியும் குறைவான விலையிலும் பொருட்களை வாங்கலாம். பயனீட்டாளர்கள் தங்களது வாகனத்தைச் செலுத்தவும் நேரத்தை விரயம் செய்யவும் தேவையில்லை. அதோடு, பல கடைகளில் அல்லது பேரங்காடிகளில் தங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தேடி ஏறி இரங்கத் தேவையில்லை. இதனால், சாலையில் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்காத தேவையில்லை. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு செலவு செய்ய தேவையில்லை. பொன்னான நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடலாம். இது மனயிருக்கத்தைப் போக்கி மனமகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அடுத்து, மின்னியல் வணிகத்தினால் பொருளாதாரம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்துக் கொண்டே போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவ்வகை மின்னியல் வணிகம், பலரும் எளிமையான முறையில் தங்களது வியாபாரத்தில் செயல்பட துணைப் புரிகிறது. அது மட்டும் அல்லாமல், மலேசியாவில் ஒரே நேரத்தில் பல வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அப்பொருட்கள் வெளிநாடுகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு, விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சேவைவரியின் காரணத்தினால் பாலக்கோடு வருமானம் நம் நாட்டின் அரசாங்கத்திற்குக் கிடைக்கப் பெறுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது.
மின்னியல் வணிகத்தினால் நன்மைகள் மட்டுமல்லாது தீமைகளும் விளைகின்றன. மின்னியல் வணிகத்தைப் பயன்படுத்துவதனால் பயனீட்டாளர்கள் பல்வகை மோசடிகளுக்கு ஆளாகுகின்றனர். உதாரணத்திற்கு, கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து, அப்பொருளுக்கு முன்கூட்டியே பணம் செலுத்துகின்றோம். ஆனால், அப்பொருளோ நம் கைக்குக் கிடைப்பதில்லை. அதே போல், சில நேரங்களில் நாம் வாங்கும் பொருளுக்குப் பதிலாக வேறொரு பொருள் நமக்குக் கிடைக்கப்பெறும். அதோடு, சில சமயங்களில் தரம் குறைந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வர். நாம் மின்னியல் வணிகத்தில் வாங்கும் பொருட்கள் வீட்டை வந்தடையக் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், இம்மோசடிகளில் ஆளாகுகின்ற ஒவ்வொருவரும் மனா உளைச்சலுக்கு பலியாகுகின்றனர்.
அடுத்ததாக, மின்னியல் வணிகத்தால் பல முதலீடுகள் செய்து பேரங்காடி மேட்டரும் சில்லறை வியாபாரம் நடத்தும் வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன. முன்பு, மக்கள் கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் சென்று பொருட்களை வாங்குவர். ஆனால், மின்னியல் வணிகத்தின் தோற்றத்திற்குப் பிறகு, கடை மற்றும் பேரங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவு சரிவு கண்டு வருகிறது. கடை மற்றும் பேரங்கடி வியாபாரிகள், வாடகை கட்டணம், தொழிலாளர்களுக்குச் சம்பளம், வரி போன்றவற்றிற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளன. பலரும் வீட்டில் அமர்ந்தவாரே பொருட்களை வாங்குவதனால், வியாபாரிகள் மேற்கண்டதுப் போல பல செலவிங்களை எதிர்நோக்குகின்றன. ஆகவே, மின்னியல் வணிகம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிப்படையச் செய்கிறது.
சுருங்கக் கூறின், மின்னியல் வணிகம் நமக்கு நன்மை மற்றும் தீமை என இரண்டையும் விளைவிக்கின்றது. அதோடு, மின்னியல் வணிகம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்குகிறது. அரசாங்கத்தினர் மின்னியல் வணிகத்தால் ஏற்படும் தீமைகளையும் பலவீனங்களையும் ஆராய்ந்து விரைவில் செம்மைப்படுத்த வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், பயனீட்டாளர்கள் பலமுறை பலமடங்கு நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
Comments