Posts

Showing posts from June, 2021

மின்வணிகம்

Image
    'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று நம் முன்னோர்கள் வாய் மொழிந்துள்ளனர். ஆனால், இன்று திரை கடலோடி திரவியம் தேடுவதற்கு அவசியமற்றுப்போகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கணினியின்வழி பணம் ஈட்டக்கூடிய சூழல் நிலவுகிறது. நவீன உலகமயமாதலால் ஆழி போன்று பரந்து விரிந்திருந்த உலகம் ஒரு விறல் நுனியில் அடங்கி கொண்டிருக்கிறது.அதற்குக் காரணம் நாம் ஓர் இடத்தில் இருந்தவாறே சில மணித்துளிகளில் உலகில் எந்த இடத்தில் இருப்பவரிடமும் தொடர்புகொண்டு வணிகம் செய்யும் சூழலைக் குறிப்பிடலாம். இன்று உலகின் மொத்தத் தொலைத்தொடர்புகளையும் இணையம் சிறைப்படுத்தி வைத்துள்ளது எனில் அது மிகையாகாது.     இந்த இணையத்தின் பயன்பாடும் ஆதிக்கமும் உலகின் மொத்த செல்வங்களை உள்ளடக்கிய வணிகச் செயல்பாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இன்றைய 21ஆம் நூற்றாண்டில் வணிக மாற்றத்திற்கு வித்திட்டது உலகமயமாதல் கொள்கையாகும். பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தேறிந்து உலக வணிகத்தைக் கையகப்படுத்த இணையம் பெரும் பங்காற்றி வருகிறது. பாரம்பரிய வணிகத்தில் காகிதத்தின் பயன்பாடு மிகுந்திருந்தது. மின்...

முக்குளிப்பு

Image
    நாட்டின் புகழ்பெற்ற முக்குளிப்பு வீராங்கனையான பண்டேலேலா ரீனோங் ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் நமது நாட்டிற்கு 2 பதக்கங்களையும் உலக வெற்றியாளர் போட்டியின்வழி 4 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த  பண்டேலேலா 10 மீட்டர் உயரத்திலிருந்து நீரில் குதிக்கும் திறன் வாய்ந்தவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 'புக்கிட் ஜாலில்' விளையாட்டுப் பள்ளியில் முக்குளிப்பு விளையாட்டில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். தேசிய நிலையிலும், ஆசியான், ஆசியா, ஒலிம்பிக் ஆகிய போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'காமன்வெல்த்' போட்டியில் தங்கம் வென்றார். 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை அனைத்துலகப் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள இவர், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.      பண்டேலேலா 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் முக்குளிப்புப் போட்டியில் காலடியெடுத்து வைத்தபோது அவருக்கு 27ஆவது இடம்தான் கிடைத்தது. ஆனால், அவரது தீவிர தொடர் பயிற்சிகளின்வழ...

கூட்டுக் குடும்பம்

Image
      ஒருவனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்த உடன்பிறப்புகள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானவர்கள். நம் வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கைக்கொடுத்து நிற்பது நம் குடும்பத்தார் மட்டுமே. அனைவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தைவிட பெருஞ்செல்வம் வேறொன்றும் கிடையாது.      இன்றைய காலக் கட்டத்தில் குடும்ப அமைப்பு மாற்றிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெரிய கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ,ஆனால், இன்றைய நவீன யுகத்தில் அத்தகைய குடும்பச் சூழல் அடியோடு மாறிவிட்டது. இப்போதுள்ள குடும்பங்கள் யாவும் தனிக் குடும்பம் என்ற பெயரில் சிறிய குடும்பமாகிவிட்டது. இந்தப் பெரிய மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா! இன்றையக் காலக் கட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது பல பேருக்குப் பெரிய சுமையாகவும் பிரச்சனையாகவும் மாறிவிட்டது என்றும் கூறலாம். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கின்றன. அதே வேளையில் அதில் பல ...

ஆறுவது சினம்

Image
            மனிதனின் உணர்வுகளில் ஒன்றுதான் கோபம். கோபம் என்கின்ற உணர்ச்சியை வளரவிட்டால் அது வளர்த்தவனையே கொள்ளும் என்பார்கள். நமது குடும்பத்தில் ஏற்படுகின்ற பெரும்பாலான துன்பங்களுக்குக் கோபமே காரணமாக அமைகின்றது என்றால் மிகையாகாது.                              தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்                               தன்னையே கொள்ளும் சினம்                      (305) என்பது வள்ளுவன் வாக்கு. எனவே, நாம் கோபம் எனும் உணர்ச்சியை அடக்கி ஆள அறிந்திருக்க வேண்டும். யூ.ஸி இர்வின்னை சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து கோபம் குறித்து மிகுதியான இலக்கியங்களை படைத்துள்ளார். அவர் கோபத்தை மூன்று நிலைகளில் வகைப்படுத்திக் காட்டுகிறார். அவையாவன அறிவைப் பாதிக்கக்கூடிய நிலை, உடலைப் பாதிக்கக்கூடிய நிலை, நடத்தையைப் பாதிக்கக்கூடிய நிலை எ...