புவான்ஸ்ரீ ஆதிநாகப்பன்
மலேசிய மேலவை உறுப்பினராக (செனட்டர்) பொறுப்பேற்ற முதல் இந்திய பெண்மணி புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்ஆவார். இவர் மஇகாவை நிறுவியவர்களில் ஒருவர். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். தன்னுடைய 18ஆவது வயதிலேயே நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி வகித்தவர். இவ்வாறு பல்வேறு சிறுப்புக்களைப் பெற்ற ஜானகி, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.