Posts

Showing posts from November, 2021

வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் ஏற்படும் விளைவுகள்

Image
    இன்றைய இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பல வகைகளில் தொழிற்சாலைகள் உள்ளன. நாம் காலில் அணியும் செருப்பு முதல் தலையில் உள்ள முடியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் வரை அனைத்தையும் தயாரிக்க தொழிற்சாலை பல இயங்குகின்றன. தொழிற்சாலை என்பது நாம் அனைவரும் பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கும் ஓர் இடமாகும். அதோடு, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடிக்கப்படும் பொருள்களை அதிகளவில் தயாரிக்க தொழிற்சாலைகள் பெரிதும் பங்காற்றுகின்றன. அதோடு, தொழிற்சாலைகளால் நமக்குப் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்விளைவுகளானது நமது அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை விளைவிக்கின்றன.     முதல் நன்மையானது, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இன்றையக் காலக்கட்டத்தில், இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். அதோடு, வேலை இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு பணத்தேவை இருப்பின் தனது பெற்றோர்களையே நம்பி இருக்கின்றனர். ஆகவே, வசிப்பிடத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதால் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பலருடைய வேலைய...

தொழில் மயமாக்கலின் நன்மை தீமைகள்

Image
    உலகம் முழுவதும் நவீன வளர்ச்சி கொண்ட நாடுகள் மத்தியிலும் தொழில் துறையின் தேவை உணரப்பட்டுள்ளது. தொழில் துறையின் விரைவான பொருளாதார வளர்ச்சி இதர துறைகளுடனான முன்னேற்றத்தையும் பின்னடைவையும் சார்ந்தே உள்ளது. 'தொழில் மயமாக்குதல்' என்பது அளவு உற்பத்திச் செய்யும் தொழில் துறைகளின் பரவலாக்கம், அதிகமான தொழிலாளிகள், பன்னாட்டுச் சந்தையை ஊக்குவித்தல், தனித்திறன் மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தியை மேம்படுத்தும் சாதனங்கள், கணினி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கச் செய்வனவாகும். இவ்வாறு முனைப்பான தொழில் மயமாக்குதல் இல்லாததால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச் சந்திக்கின்றன; ஏழ்மை நிலையில் உள்ளன. எனவே, நவீன வளர்ச்சி நிலைகளில் விரைவான வளர்ச்சியையும் பொருளாதார மேம்பாட்டையும் பெறுவதற்குத் தொழில் துறையின் பங்கு அளப்பரியதாகும்.     தொழில் மயமாக்குதல் மூலம் நாட்டு   வருமானம் உயர்ந்து பொருளாதாரம் சீரடைகிறது. பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கும் நாடுகளின் பெரும்பங்கு வருவாய் தொழில் துறையிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. தொடர்ந்து, தொழில் மயமாக்...

ஏ.பி.ஜெ அப்துல் கலாம்

Image
    இந்தியாவின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியுமான   ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் சிறந்த அறிஞர் ஆவார். அவர் இந்திய மக்களுக்காகக் குறிப்பாக மாணவர்களிடையே செய்திறனுக்காகவும் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது சுயசரிதை நூலான 'அக்னிச்சிறகுகள்' எனும் நூலில் அவரது அறிவியல் கண்டுப்பிடிப்புப் போராட்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தூண்டுகோல் இன்றி நாம் சாதிக்க முடியாது எனும் கூற்றுக்கிணங்க அப்துல் கலாம் தாம் கற்ற திருக்குறளுக்கு ஏற்பத் தமது வாழ்க்கையை முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார். தமது பள்ளிக்காலத்தில் மிதிவண்டியில் வீடு வீடாகச் சென்று நாளிதழ்கள் விற்று தமது படிப்புக்குத் தானே உதவிக் கொண்டார். மனிதனுக்குச் செய்ப்புண்ணியம் மிகவும் அவசியம். நாட்டுக்கு அவர் செய்த புண்ணியமானது அவரை ஏவுகணை நாயகனாக மாற்றியமைத்தது. இளைழர்களுக்கு இளமையிலேயே கல்வியின் விளைபயன் பற்று நன்கு எடுத்துரைத்தார். அதிபர் பதவி ஓய்வுக்குப் பின்னரும் அவர் 'கனவுகாண்' எனும் மந்திரச் சொல்லே அவரது பாடுபொருளாக இருந்தது. எதிர்காலத்தை மாணவர்கள் நல்வழியில் கொண்டு ச...

மு.கருணாநிதி

Image
    மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர்  மு.கருணாநிதி, 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமையைப் பெற்றவர். பன்முகத் தன்மை வாய்ந்த கலைஞர் தமிழ் மொழிக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது. தன வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். சமூகப் பார்வையும், அனல் தெறிக்கும் வசனங்களும், அழகு கொஞ்சும் மொழிநடையும் அவருக்கே உரியது. பராசக்தி, மனோகரா, திரும்பிப் பார், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்கள் அவரது வசனங்களுக்காகவே புகழ் பெற்றவை. நிறைய நாடகங்களை எழுதி சிலவற்றில் நடித்தும் உள்ளார். அவர் எழுதிய திரைப்பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. தனக்கே உரிய புதுமையான நடையில் ஏராளமான கவிதைகளை எழுதி, தமிழ் தமிழ் மொழியை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். கவியரங்கங்களில் பங்கு பெற்று அதன்வழி பல கவியரங்கக் கவிதைகளை வார்த்துத் தந்தவர் கலைஞர். அவர் எழுதிய "உடன்பிறப்பே" என்று தொடங்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அழகிய மொழி நடைக்காகவும், ஆழ்ந்த கருத்துகளுக்காகவும் போற்றப்படுகின்றன.      சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா  என...