Posts

Showing posts from March, 2021

வாசிப்பின் அவசியம்

Image
    'ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்' என்பது உலகநீதி. உலகில் நடக்கும் தகவல்களைப் பெற நாம் பல்வேரு நூல்களை ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.     ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது.     மொழி வளத்தைப் பேருக்கும். அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். அறிவியல், மொழி, சரித்திரம், விளையாட்டு, அரசியல் என பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற வாசிப்புத் துணைப்புரிகிறது.     இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. வாசிப்பைச் சிறந்த பொழுதுபோக்காகக் கொள்வது அவசியம். கதை, கட்டுரை, கவிதை, செய்யுள் போன்றவற்ற...

நீரின் பயன்

Image
    இப்பூமி பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவையே பஞ்சபூதங்கள் என்போம். இவற்றில் நீர் உயிரினங்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். நீர்  கடல்,ஆறு, குட்டை, ஏறி, கிணறு, குளம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது. நீரின்றி அமையாது உலகு என்பார்கள்.     நீர் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். குளிப்பதற்கு, குடிப்பதற்கு, சமைப்பதற்கு, துவைப்பதற்கு, கழுவுவதற்கு என பல வேலைகளை செய்ய நீர் பயன்படுகிறது. நீர் இல்லாவிடில் இவ்வேலைகள் தடைப்படும். அதுமட்டுமின்றி வெயில் காலங்களில் மனிதர்கள் அதிக அளவில் நீர் அருந்தாவிடில் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களுக்கும் அருந்த நீர் அவசியம்.     பயிர்கள் செழித்து வளரவும் நீர் மிக அவசியமாக இருக்கின்றது. விவசாயம் ஒவ்வொரு நாட்டிற்கும் அடிப்படையான ஒன்றாகும். மனிதர்கள் உயிர் வாழ தாவரங்களும் பயிர்களும் தேவை. அந்தத் தாவரங்களும் பயிர்களும்  செழித்திட நீர் அவசியம். நீர் இல்ல வறண்ட பூமியில் பயிர்கள் வளராது. எனவே, நீரை எப்போதும் சேமித்து வைக்கின்றனர்.     மின்சா...

துரித உணவுகளால் தீமையே விளைகின்றன என்பதை - ஆதரித்து எழுதுக

Image
    நாகரிக வளர்ச்சிக்கேற்ப நமது உணவு முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் துரித உணவுகளும் பலவிதமாக அறிமுகம் செய்யப்பட்டு மக்களை காந்தம் போல் ஈர்க்கின்றன. துரித உணவு என்பது எளிதில் கெடாமலும் விரைவில் தயாரிக்கக் கூடியவகையாக உருவாக்கப்பட்ட உணவு பொருள்களாகும். துரித உணவுகளினால் தீமையே விளைகின்றன என்பது உறுதி.      துரித உணவுகளை அதிகம் உண்பதால் நம் உடலுக்குப் பல நோய்கள் உண்டாகும். துரித உணவுகள் கெடாமல் இருக்க பல இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதை உண்பவர்களுக்கு வயிறு வலி, குடல் புற்று நோய், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.     மேலும், பொட்டலங்கள் மற்றும் டின்களில் அடைக்கப்படும் துரித உணவுகளை உண்பதால் உண்டலுக்குத் தீமைகள் விளைகின்றன. டின்களில் அடைக்கப்படும் உணவு பொருட்களில் நச்சுத் தன்மை அதிகம் உள்ளன. இதனால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன.     மேலும், தற்போது சிறுவர்களிடையே உடல் பருமன் பிரச்னை ஏற்படுவதற்குத் துரித உணவே முக்கிய காரணம்...

சொந்தத் தொழில் செய்வதனால் ஏற்படும் விளைவுகள்

Image
    தற்பொழுது நம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லாமல் பலர் சொந்தத் தொழில் செய்வதில் நாட்டம் கொண்டுள்ளனர்.  சொந்தத் தொழில் என்பது தனிச்சயாகச் செய்யக் கூடிய பணியாகும். வியாபாரம், விவசாயம் போன்றவற்றைச் சொந்தத் தொழில் அடங்கும். சொந்தத் தொழில் செய்வதால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன.     சொந்தத் தொழில் செய்வதற்குப் பணி நேரம் என்று எதுவும் கிடையாது. ஆகையால், நாம் ஓய்வு நேரதிக்கேற்ப வேலையாச் செய்யலாம். சில நேரங்களில் அதிக நேரம் தொடர்ந்து உழைக்க வேண்டும். கடின உழைப்பும் விடா முயற்சியும் மிகவும் முக்கியம். இவை இருந்தால் சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம்.      அடுத்து, சொந்தத் தொழில் செய்வதால் நாமே சுய முடிவுகளையும் எடுக்க முடியும். நாம் எடுக்கும் முடிவுகள் சில வேளைகளில் நம்மை உயர்திக் கொண்டே போகும் என்பது திண்ணம். எனவே, சொந்தத் தொழிலில் பல அனுபவங்களும் அதிக வருமானமும் கிடைக்கும். அதோடுமட்டுமல்லாமல், சொந்தத் தொழிலில் ஈடுபடுவதால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நமக்குத் பல தொழிலதிபர்...

விளம்பரத்தினால் ஏற்படும் நன்மை தீமைகள் - (Vilambarathuinaal Eerpadum Nanmai Theemaigal)

Image
            இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளம்பரங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சந்தைக்கு வந்த ஒரு பொருளை அறிமுகம் செய்து விற்பனை செய்வதற்கு விளம்பரம் அதிகம் துணைபுரிகின்றன. விளம்பரங்களினால் நன்மைகளும் தீமைகளும் உள்ளன.      விளம்பரங்களினால் மக்கள் சந்தைக்கு வந்த பொருள்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிகின்றது. மக்கள் தரமான ஒரு பொருளைத் தேர்வு செய்து வாங்க விளம்பரம் உதவுகின்றது. அதோடுமட்டுமல்லாமல், விளம்பரங்களினால் மக்கள் புதிய சாதனங்களை அறிந்து கொண்டு அதை வாங்குகின்றனர்.  இதனால், பொருட்களின் விற்பனை அதிகரித்து நாட்டின் வருமானமும் அதிகரிக்கின்றன.     அடுத்து, விளம்பரங்களில் காண்பிக்கும் கல்விக்கூடங்கள் மற்றும் பொது அறிவிப்புப் போன்றவை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. உடல்  ஆரோக்கியம், நோய்கள், தற்கால நடப்புச் செய்திகள் போன்றவற்றை ஒளிபருப்புவதால் மக்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள முடிகின்றது. அரசாங்கத்தின் கோட்பாடுகளையும் முக்கிய அறிவிப்புகளையும் மக்களுக்கு  உடனுக்குடன் தெரிய...

புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்

Image
    இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்கும் மறைந்து கிடைக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் பெரிதும் துணைபுரிகின்றன.     சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகளை மேலோங்கச் செய்கின்றன. மாணவர்கள் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழ புறப்பாட நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன.     தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் ம...

குமரனின் வீடு

Image
    "இதுதான் குமரன் வீடு...வாங்க போகலாம்," என அமுதா கூறியதும் எல்லோரும் ஒரு கணம் மிரண்டு போனார்கள்.      சிவா கையில் பிடித்திருந்த லாந்தர் விளக்கை உயர்த்திப் பிடித்தான். வெளிச்சம் அவ்விடத்தை ஊடுருவிச் சென்றது.     "பேய் வீடு மாதிரிலே இருக்கு?" என சரண் மனத்தில் நினைத்துக் கொண்டே பயந்தவாறு அவர்களுக்குப் பின்னால் தயங்கி நடந்தான்.     "அமுதா உனக்கு நிச்சயமா தெரியுமா? இது குமரன் வீடு மாதிரி இல்லயே?" என வார்த்தைகள் நடுங்க   சிவா வினவினான்.     "டேய்ய்! பயப்படாதீங்க. அவன் கொடுத்த முகவரி இதுதான். அப்படின்னா இதுதானே வீடு?" என அமுதா சட்டென கோபத்தால் வெடித்தாள்.     "நாங்க ஒன்னும் பயப்படல, நாங்கலாம் பேய்க்கே 'பேட்மிண்டன்' சொல்லிக் கொடுப்போம்," எனக் கூறிவிட்டு விரிந்த கண்களுடன் சரண் அக்காட்டுப் பாதையைக் கவனித்தான்.அவர்கள் மூவரும் குமரனின் வகுப்பு நண்பர்கள். இன்று தனக்குப் பிறந்தநாள் வீட்டுக்கு வருமாறு குமரன் அனைவரையும் அழைத்திருந்தான்.     "சிவா டே! இது பிறந்தநாளுக்கு அழைச்ச மாதிரி தெரில," என சரண் எச்சிலை விழுங்கின...