வாசிப்பின் அவசியம்

'ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்' என்பது உலகநீதி. உலகில் நடக்கும் தகவல்களைப் பெற நாம் பல்வேரு நூல்களை ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். அத்துடன் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தவும் வாசிப்பு அவசியமாகிறது. மொழி வளத்தைப் பேருக்கும். அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். அறிவியல், மொழி, சரித்திரம், விளையாட்டு, அரசியல் என பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் நாம் தகவல் அறிந்த சமுதாயமாக மாற வாசிப்புத் துணைப்புரிகிறது. இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு மனமகிழ்வு பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. வாசிப்பைச் சிறந்த பொழுதுபோக்காகக் கொள்வது அவசியம். கதை, கட்டுரை, கவிதை, செய்யுள் போன்றவற்ற...