Posts

Showing posts from February, 2021

நான் யார்?

Image
ஜான் எஃப் கென்னடி  பில் கிளிண்டன்      இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போக வேண்டும்? எப்படிப் போகப் போகிறோம்? என தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.     அமெரிக்க அதிபராக விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். அது போல அன்று அங்கு வந்திருந்த ஒரு மாணவனின் கன்னடத்தைத் தட்டி "உன் எதிர்கால ஆசை என்ன" எனக் கேட்டார் கென்னடி. அதற்கு அம்மாணவன் "நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் இலட்சியம்," என்றான்.  விழிகளை உயர்த்திவிட்டு "குட்" என வாழ்த்தியபடி கென்னடி நகர்ந்தார். பின்னாளில் தான் சொன்னபடியே அமெரிக்காவின் அதிபரானான்   அந்தச் சிறுவன். அவர்  வேறு யாருமல்ல. உலகப் புகழ் பெற்ற பில் கிளிண்டன் தான் அவர். அவர் எண்ணம் வெறும் ஆசையோ அல்லது கற்பனையோ அல்ல. தீர்க்கமான முடிவு...

இனிப்பு - சிறுகதை

Image
           நந்தினிக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அம்மா வாங்கி தந்த லட்டுகளைச் சாப்பிட்டு விட்டு மீதியைத் தனது அறையிலிருந்து மேசை மீது வைத்தாள். சிறிது நேறத்தில் எறும்புகள் மேசை மீது இருந்த லட்டைத் தேடி வந்து வரிசையாகக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்ல ஆரம்பித்தன. இதைப் பார்த்த நந்தினி லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்தாள்.     சிறிது நேரம் கழித்து அங்கேயும் எறும்புகள் வர ஆரம்பித்தன. எறும்புகளின் தொல்லை தாங்க முடியாமல் லட்டு வைத்திருந்த பையை வேறு இடத்திற்கு மாற்றி  வைத்து, எறும்பு வராமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்தைத் தூவினால். சிறிது நேரத்தில் அங்கு லைட்டைத் தேடி வந்த எறும்புகளின் சில பரிதாபமாக இறந்து போயின. இதைப் பார்த்த அவள், இனி எறும்புகள் லைட்டைத் தேடி வராது  என்று நினைத்தாள். சிறிது நேரம் கழித்து, சில எறும்புகள் வரிசையாக வந்து இறந்து போன எறும்புகளின் உடலைத் தூக்கிச் சென்றன.     மேலும் சில எறும்புகள் வரிசையாக வேறு வழியாக லட்டு இருக்கும் இடத்தை நோக்கி வர ஆரம்பித்தன. அத...

பணி ஓய்வு உரை (pani ooyvu urai)

Image
  பெருமத்திற்குரிய அவைத் தலைவர் அவர்களே, தலைமை ஆசிரியர் திரு.அன்பு அவர்களே, ஆசிரியர்களே, எங்களை பிரிந்து செல்லவிருக்கும் திரு .இராமன்  அவர்களே மற்றும் சோதனைகளைச் சாதனையாக மாற்றவிருக்கும் மாணவ மணிகளே. உங்கள் அனைவருக்கும் நமது தமிழ்த் தாயின் பாதம் தொட்டு இனிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் இங்கு குருடியிருப்பதன் காரணம் இன்னும் சிறிது நேரத்தில் நம்மை பிரிந்து செல்லவிருக்கும் நமது அன்பிற்கினிய ஆசிரியர் திரு.இராமன் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசரிப்பு ஆகும்.     நாம் இவரின் சிறப்புகளைக் காண்போம் வாரீர். இவர் முப்பது ஆண்டு காலமாக இப்பள்ளியில் பணி புரிந்துள்ளார்.இவர் ஒன்று "பேதா"வின் வகுப்பாசிரியர் ஆவார். இவர் நம் பள்ளிக்கு பல உதவிகளைச் செய்துள்ளார். நம் பள்ளியில் படிவம் மூன்று (PT 3) மற்றும் படிவம் ஐந்து (SPM) என்ற இரு படிவ மாணவர்களும் தமிழ் மொழிப் பாடத்தில் அதிகத் தேர்ச்சி அடையச் செய்ய துணைப்புரிந்தவர் இவர்தான். இதனால், இப்பள்ளியில் தமிழ் மொழி பாடத்தில் அதிகத் தேர்ச்சி அடையும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.       அது ம...

நான் பணக்காரரானால் (Naan panakkaararaanaal)

Image
          "சின்ன சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை," எனும் சினிமா பாடல் நாம் அனைவரும் கேட்டிருப்போம். அனைவருக்கும் சிறு வயதிலிருந்தே ஆசைகள் பல இருக்கும்.  எனக்கும் ஓர் ஆசை உள்ளது. அது என்னவென்றால் நான் ஒரு பணக்காரராக வேண்டும். நான் பணக்காரரானால் பலருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய முடியும்.     நான் பணக்காரரானால் முதலில் ஏழைகளுக்கு உதவுவேன். ஏழை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவேன். பள்ளிச் செலவுகளை நானே பூர்த்தி செய்வேன். ஏழை மக்களுக்கு வீட்டுச் செலவுக்காக பணம் கொடுத்து உதவுவேன். இதனால்,பலர் வாழ்க்கை நன்மை அடையும். அது மட்டுமல்லாமல், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்வேன்.      அடுத்ததாக, நான் பணக்காரரானால் இலவச மருத்துவமனை ஒன்று காட்டுவேன்.அங்கு ஊர் மக்கள் அனைவரும் இலவசமாகச் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் மக்கள் உடனுக்குடன் சிகிச்சை பெறுகின்றனர். நோய் நொடியின்றி நீண்ட நாள் உயிர் வாழ்வர். அந்த மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருத்துவர்களையும் தாதியர்களையும் பாணியாட்களையும் சேர்த்துக் கொள்வேன். அங்கு பணிபுரிபவர்கள் அன்புடனும் பண்...

அதிகாரப்பூர்வக் கடிதம் – மொழிக் கழகம் (athigaarappoorva kaditham)

Image
  லோகலட்சிமி த \ பெ சுரேஷ்குமார் எண் 140, ஜாலான் ஏக்கார் 1 \ 4, பண்டார் ஏக்கார், 71200, ரந்தாவ், நெகிரி செம்பிலான். _____________________________________________________________   நூலகப் பொறுப்பாளர், மலாயாப் பல்கலைக்கழக நூலகம், லெம்ப பந்தாய், 50630 – கோலாலம்பூர்.                                           7 ஏப்ரல் 2019   ஐயா,   தமிழ்மொழி கழகத்தின் கல்விச் சுற்றலா.   வணக்கம், ஐயா. நான் இக்கடிதத்தை எழுதுவதன் நோக்கம் ரந்தாவ் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகம் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவை மேற்கொள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகத்திற்கு வரவுள்ளோம். அதோடு, மாணவர்களுக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள ஆர்வத்தையும் பற்றையும் மேம்படுத்தவே இக்கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. நான் எனது மாணவர்களுடன் அங்கு வருகை புரிய அனுமதி பெறவே இக்கடிதத்தை எ...

அதிகாரப்பூர்வமற்ற கடிதம் – மரம் நடுவோம். (athigaarepoorvamattra kaditham - surat kiriman tidak rasmi)

Image
  எண் 15, ஜாலான் பைடுரி 5,                                               தாமான் பைடுரி,                                      42700 பந்திங்,                                             சிலாங்கூர் டாருள் ஏசான்.                                10 மே 2017 அன்புத் தங்கை கனிமொழிக்கு, வணக்கம்.      இங்கு நம் பெற்றோர், உடன் பிறப்புகள் அனைவரும் நலன். நீயும் அங்கு நலமாக இருக்க இறைவனை இறைஞ்சுகின்றேன். அன்புத் தங்கையே, சென்ற வாரம் நீ அனுப்பிய கடிதத்தில் நம் வச...

அன்பு (Anbu)

Image
       அன்பு என்பதில் முதல் இடம் வகிப்பதில் அன்னை தெரேசா. அன்பு என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும். அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்றால் அது மிகையாகாது. உலகில் சிறந்தது அன்பு.      ஒருவரின் மனம் நெகிழ்ந்து வெளிப்படும் உணர்வு அன்பாகும். தன்னையே அறியாமல் ஒருவரின் மீது எழும் ஒரு விதமான உணர்வுதான் அன்பு. அது மட்டும் இல்லாமல், தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுவதும் அன்பாகும். உதாரணத்திற்கு, தெருவின் ஓரத்தில் காயமாகவும் அழுக்காகவும் இருக்கும் ஒரு நாயின் உயிரைக் காப்பாற்றுவதும் அன்பு.      அதோடு, ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு நிலவுகிறது. குடும்பத்தில் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் அன்பு நிலவுகின்றது. இது போன்ற பெற்றோர்கள், பிறர் உயிரைத் தன்னுயிர் போலக் காக்கின்றனர். அது மட்டும் இல்லாமல், இவர்கள் சமுதாய வளர்ச்சி மீது அன்பும் அக்கறையும் காட்டும்படி உயர்கின்றனர்.      அடுத்து, உண்மையும் நேர்மையும் அன்புக்கு இலக்கணம் ஆகும். உண்மையாகவும் நேர்மையாகவும் ...

மலேசியாவில் பொதுப் போக்குவரத்து (Malaysiavil pothu pokkuvarathu)

Image
            பொதுப் போக்குவரத்து இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமா ஒன்றாகக் கருதப்படுகின்றது. நாம் தரை மார்க்கமாகவும் நீர் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாகவும் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தி வருகின்றோம்.      நமது அன்றாட வாழ்வில் பொதுப் பேருந்து, வாடகை வண்டி, அதிவிரைவு இரயில், தொடர்வண்டி, முச்சக்கர வண்டி, மூடுந்து போன்ற தரைப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாகப் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இம்முறையிலான போக்குவரத்து குறைந்த விலையில் நிறைந்த சேவையை வழங்கி வருகிறது.      நீர்வழிப் போக்குவரத்தென்பது கப்பல், ஓடையிழுவை, நீர்மூகிக் கப்பல், படகு போன்றவற்றின் மூலம் பயணிப்பதாகும். மலேசியாவில் பங்கோர் தீவு, புலாவ் பெசார், பினாங்கு தீவு, லங்காவி தீவு போன்ற தீவுப் பகுதிகளுக்குப் பயணிப்பவர்கள் நீர்ப் போக்குவரத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையிலான போக்குவரத்தின் வாயிலாகக் குறிப்பாகக் கப்பலில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயணிக்க முடியும். மேலும், ஓடையிழுவையில் (ஃபெர்ரி) வாகனங்களையும் ஏற்றிச் செல்லலாம...

இணையத்தினால் ஏற்படும் நன்மைகள் (inaiyathinal erpadum nanmaigal)

Image
  அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல தொழில்நுட்பம் இன்றி  இவ்வுலகம் இயங்காது என கூறலாம்.இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆகையால், இணையத்தினால் நமக்கு அதிக நன்மையே ஏற்படுகின்றன.      இணையத்தின் வழி நாம் கைவிரல் நுனியில் பல தகவல்களை அறிந்துக் கொள்ளலாம். நாம் இணையத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். மேலும், உலக மக்களாகிய நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இதனால், கிணற்றுத் தவளை போல் இல்லாமல் தகவல் அறிந்த சமுதாயமாகத் திகழலாம்.      மேலும், இணையத்தைப் பயன்படுத்தி நாம் நமது நண்பர்களோடு தொடர்புக் கொள்ளலாம். அரட்டையடித்தல், முகநூல் போன்ற சமூக வளைத்தளங்களைப் பயன்படுத்தி நாம் நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல், நாம் வெளிநாட்டு நண்பர்களோடு தொடர்புக் கொள்ளவும் இணையம் உதவி புரிகின்றது.      தொட ர்ந்து, இணையத்தின் வழி மாணவர்கள் ‘ மெய்நிகர் கற்றல் ’ சூழலில் கல்வியைக் கற்கலாம். மாணவர்கள், ஆசிரியர் கொடுக...

தொலைக்காட்சி பார்ப்பதனால் நன்மையே அதிகம். (Kebaikkan menonton televisyen)

Image
     இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைக்காட்சி நம் அன்றாட தேவைகளுள் ஒன்றாகும். இன்று தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை என உறுதியாகக் கூறலாம். தகவல் தொடர்புச் சாதனங்களுள் தொலைக்காட்சியும் ஒன்றாகும். தொலைக்காட்சி பார்ப்பதனால் அதிக நன்மையே விளைகின்றன.      தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகளைப் பார்ப்பதனால் நாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் தற்கால செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடியும். இதனால் மாணவர்கள் கிணற்றுத் தவளை போல இல்லாமல் தகவல் அறிந்த சமுதாயமாகத் திகழலாம்.      அடுத்து, தொலைக்காட்சி பார்ப்பதனால் மாணவர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ளலாம். தொலைக்காட்சியில் உள்ள கல்வி அலைவரிசைகளைப் பார்ப்பதனால் மாணவர்கள் சுயமாகப் பாடத்தை மீள்பார்வை செய்ய முடியும். மாணவர்கள் கற்றவற்றை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள தொலைக்காட்சி கைக் கொடுக்கின்றது.      அதோடுமட்டுமல்லாமல், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் நாமா நேரத்தையு...

நாளிதழ் வாசிப்பதன் நன்மைகள். (Nalithal vaasippathan nanmaigal)

Image
       நாளிதழ்  வாசிப்பதால் நாம் பல நன்மைகள் அடைகின்றோம். நாளிதழின் மூலம் நாம் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம். நாளிதழ் தமிழ்மொழி, தேசிய மொழி, ஆங்கில மொழி என பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மொழியில் ஏறக்குறைய ஐந்து பெயர்களில் நாளிதழ் அச்சிடப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழ் மொழியை எடுத்திக் கொண்டால் நண்பன், தமிழ் நேசன், வானம்பாடி, மக்கள் ஓசை, காலை மலர் என பல வகையான பெயரிகளில் உள்ளது.      நாளிதழில் நாம் செய்திகளை வாசிப்பதன் மூலம் உச்சரிப்பைச் சரி செய்து கொள்ளலாம். சிலர் நாளிதழ் வாசிக்க சோம்பல் பட்டு தொலைகாட்சியில் போடும் செய்திகளைப் பார்க்கின்றனர் ; கேட்கின்றனர். அதிலும் வாசிக்கத் தெரியாதவர்களும் உள்ளனர்.      அது மட்டுமல்லாமல், படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடி தருகின்றது நாளிதழில் வரும் விளம்பரங்கள். அது மட்டுமா ? விளம்பரங்கள் கொடுப்பவர்களின் தொழில்துறையும் உயர்கின்றது. அரசாங்கத்தினரும் அளவுக்கு அதிகமாக வசூலித்து மக்களுக்கு லாபகரமான செயல்களைச் செய்கின்றனர். இதனால் மக்களும் நன்மை ...

கடல் - கட்டுரை (Kadal - katturai)

Image
          கடல் என்பது நீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இருக்கும் ஓர் அழகிய இடமாகும். கடலுக்கு உரவுநீர், உவரி, இரைநீர், சலகாங்கம், ஊர்மிமாலி, வாரீசம் என இருநூறு பெயர்கள் உள்ளன. கடல் உலகைச் சுற்றிப் பல இடங்களில் உள்ளன. மீன், நண்டு, இறால் கனவாய் எனப் பல வகையான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. கடல் மிகவும் பெரிய பரப்பளவு கொண்ட இடமாகும். அதோடு மட்டும் இல்லாமல், கடல் மிகவும் ஆழமான இடமாகும்.      கடலினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. மனிதர்களாகிய நாம் உயிருடன் வாழ உண்ண உணவு தேவைப்படுகின்றது. நாம் உண்ணும் கால் பகுதியானது இறைச்சி மற்றும் மீன் வகைகள் ஆகும். மீன், நண்டு, சுறா, இறால், கணவாய், சிப்பி எனப் பல வகையிலான நீர்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. நாமும் சந்தையில் விற்கும் நீர்வாழ் உயிரினங்களை வாங்கி, சமைத்து உட்கொள்கிறோம். கடல் இருப்பதனால்தான் நம்மால் நீர்வாழ் உயிரினங்களை உண்ண இயல்கிறது.      அடுத்ததாக, நம் அன்றாட வாழ்வில் மின்சாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாம் மின்சாரத்தை சூரிய ஒளி, நீர், இடி என பல மூலங்களிலிருந்...

Covid-19 : விடுமுறையில் நான் (vidumuraiyil naan >covid-19 information<)

Image
            2020ஆம் ஆண்டு கோவிட்-19 எனும் புதிய நோய் மலேசியாவில் தொற்று கண்டது. இது மிகவும் கொடுமை மிகுந்த நோய் ஆகும். 1720, 1820, 1920ஆம் ஆண்டுகளில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய நோய்கள் உருவாகின. அதே போல கடந்த ஆண்டும் கோவிட்-19 புதிய தொற்றாகும். ஒரு நபரிடமிருந்து மற்றவர்களுக்குச் சுலபமாக இந்நோய் பரவுமே. ஜாதி, மதம், பேதம் என எதையும் பாராமல் இந்த உலகையே குலுக்குகிறது.      கோவிட்-19 எனும் இக்கொடிய நோய் சீன நாட்டில் வுஹான் எனும் இடத்திலிருந்து பெய்ஜிங், ஷென்சென், அத்தாலி, அமெரிக்கா, என உலகம் முழுவதும் பரவியது. கூட்டமான இடத்திலோ அல்லது நெருக்கமான இடத்திலோ அல்லது இடைவெளி இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் இடத்திலோ அந்நோய் பரவுகிறது. சீனாவில் தோன்றிய இந்நோய் மருத்துவர் ஜாங் ஜிக்சியன் சிகிச்சை அளித்தார். அதோடு, டிசம்பர் இருபத்து ஏழாம் திகதி அன்று வுஹான் ஜியாங்கன் சிடிசிக்குத் தகவல் கொடுத்தார். இவர் மூலம் அனைத்து மருத்துவர்களுக்கும் இந்நோய் பற்றி தெரிவிக்கப்பட்டது. மார்ச் பத்தொன்பது மற்றும் இருபத்து ஆறாம் திகதிகளில் இத்தாலி மற்றும் அமெர...